Monday, 15 August 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி இரண்டு 
(தொடர்ச்சி...)
   ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயரை இந்நாட்டிலிருந்து விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை கண்ணும் காதுமாகக் கருதி, ஆங்கிலத்தை விடமாட்டோம் என உறுதியோடு உள்ளனர். உலக மக்களுள் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்திற்கு உரியவராய் இருக்கின்றனர். இன்று இத்தகைய உயர் நிலையைப் பெற்றுள்ள ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது. இலத்தீன் மொழியும், பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஆண்டன. பின்பு ஆங்கிலேயரிடத்தில் எழுந்த மொழிப் பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்தை வழங்கியது.
   தமிழ் வளர்ச்சி பற்றியும், பிற சொற்கலப்பினால் வரும் நன்மை பற்றியும் கூறும் பலர்க்கு தமிழ்மொழி வரலாறும் ஆங்கில மொழி வரலாறும் தெரியாது. தெரிந்திருந்தால் பிறமொழி கலப்பால்தான் மொழி வளரும், அஃதே உண்மை மறுமலர்ச்சி என்று சொல்லமாட்டார்கள்.
   மொழி சிறப்புற மொழிக்குரியோர் சிறப்புற வேண்டும். உலகப் பொது மொழி என்னும் நிலையை இன்று ஆங்கிலம் அடைந்ததற்குக் காரணம் ஆங்கிலேயர்கள்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சித் துறையிலும், அறிவியல் துறையிலும், வணிகத்துறையிலும், நாட்டுப் பற்று, உரிமைப் பற்று, மொழிப் பற்று முதலியவற்றில்  சிறந்து விளங்கியதால்தான் ஆங்கிலம் சிறப்புற முடிந்தது. ஆக, தமிழ் சிறப்புற வேண்டுமென்றால் தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்புற வேண்டும்.
   நமக்கு பயன்படுகின்றவற்றுள் முதன்மையானது மொழி. நாட்டு வரலாறு,அறிவியல் முன்னேற்றம்,பொருளியல், அரசியல் முதலியன போன்று நம் மொழி மொழி இயல்பு, தோற்ற்றம், வளர்ச்சி பற்றியும் தவறாது அறிய வேண்டும் என்று தமிழர்கள் நினைக்க வேண்டும்.
   நம் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தவும், தொழிலையும் அரசினையும் நடத்தவும் துணையாக இருப்பது மொழிதானே? நாம் இன்னார் என்பதை தெரிவிப்பதற்கும், பிறர் இன்னார் என்பதை அறியவும் இன்றியமையாது தேவைப்படுவது மொழிதானே? ஆகவே, தமிழைப் பற்றி தமிழர் அனைவரும் அறிந்து இருத்தல் வேண்டும்.
தமிழ் மொழியின் சிறப்புகள்
   தமிழ் மொழிஇனிமையானது;

                                                                                                                             மலரும்...

No comments:

Post a Comment