Tuesday, 1 November 2011

ஈழத்தமிழர்க்குத் துணை நிற்போம்!

உணவும் இன்றி உடையும் இன்றிப்
பணமும் உடைமையும் படுக்கையும் இழந்தனர்!
தாயை இழந்து தவிக்கும் குழந்தை!
சேயை இழந்தவர் சிந்தை கலங்குவர்!
கணவனை இழந்தே கதறுவர் மனைவியர்!
பிணங்களின் பெருக்கம்! பெரும்போ ராட்டம்!
எல்லாம் இழந்தே ஏதிலி யாயினர்!
பொல்லாக் கொடுமைப் போரினால் தப்பி
அவலம் உற்றவர் அணுகினர்
அவர்களை நாமும் அரவனைத் திடுவோமே!

இலங்கைத் தமிழர் இன்னல் நீங்கிட
கலங்கும் தாயும் பொங்கி எழுந்திட
நாளைப் பொழுது நமக்கென விடிந்திட
தோளை உயர்த்தினர் ஈழத்தமிழரே!
பாவி சிங்களன் இனவெறிச் செயலால்
பச்சை மழலைகள் பலியா யினரே!
குருதி உடம்பில் சொட்டச் சொட்டக்
காலை இழந்துங் கையை இழந்தும்
துடித்துச் சாகிறான் தமிழன்
துயர்நீக் கிடநம் துணையளிப் போமே!



No comments:

Post a Comment